சாமி படங்கள்- சுவர்
அழுக்காகாமல் பூ வைக்க
ஒரு யோசனை
சாந்திப்பிரியா
நாம் பூஜை அறையில் மாட்டும் சாமி படத்தின் மீது பூ வைக்கின்றோம். அவற்றை தலைப் பகுதியில் பிரேமுகுப் பின்னால் சொருகி வைப்பதினால் நாளடைவில் அந்த இடத்தில் கறை ஆகி சுவர் அழுக்காகி விடும். பூக்களை வைக்காத நாட்களில் அந்த இடம் கருப்பாகத் தெரியும். ஆகவே சுவற்றை அசுத்தப்படுத்தாமல் இருக்க நான் பூஜை அறையில் உள்ள சாமிகளின் பிரேமின் தலைப் பகுதியில் ஒரு அங்குலம் நீளமும் அறை அங்குல அகலமுமான கெட்டியான (சிறிது தடிமனான ) வண்ண அட்டையின் ஒரு பக்கத்தில் சிறு ஓட்டை போட்டு (பஞ்ச் மிஷினினால்) பெவிகால் போட்டு ஒட்டி வைத்தேன். அட்டையை இப்போது அந்த அட்டையின் ஒட்டையில்தான் பூவை சொருகி வைக்கின்றோம். சுவர் கறை படுவது இல்லை. நாம் எந்த வீட்டுக்கு குடி சென்றாலும் சுவர்  அழுக்கு ஆகாது. பிரேமின் வண்ணத்துக்கு ஏற்ப அட்டையை வாடர் கலர் செய்து விட்டால் பிரேமுடன் அது ஒன்றி இருக்கும்.  அச்சிங்கமாகவும் தெரியாது.  கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்.