குஜராத் சலன்பூர் ஆஞ்சனேய  ஆலயம்
சாந்திப்பிரியா

சாமிநாராயணன் சம்பிரதாயத்தினர் நிறுவி உள்ள அற்புதமான ஒரு ஹனுமான் ஆலயம் குஜராத் மாநிலத்தின் சாலன்பூர் என்ற சிறு நகரில் உள்ளது. அந்த சிறு நகரம் அகமதாபாத்தில் இருந்து சுமார் அறுபது மைல் தொலைவில் உள்ளது. அதைவிட சிறந்தது, ராஜ்கோட் அல்லது பவனகருக்கு சென்று அங்கிருந்து சுமார் ஒன்றரை மணி நேர டாச்சி அல்லது பஸ்சில் பயணம் செய்து போதத் ( Botad ) எனும் இடத்தை அடைய வேண்டும். அங்கிருந்து ஆட்டோ பிடித்து ஆலயத்துக்கு செல்லக் கூறினால் சுமார் முப்பது நிமிட நேரத்தில் அந்த ஆலயத்துக்கு சென்று விடலாம். அந்த ஆலயத்தின் மகிமை என்ன என்றால் பேய் , பிசாசு பிடித்தவர்கள் அங்கு சென்று அங்குள்ள ஹனுமாரை வணங்கினால் அவை ஓடி விடும் என்பதே. அவரைப் பொதுவாக துன்பங்களைக் களையும் ஹனுமார் என அழைக்கின்றனர்.
முன்னூறு ஆண்டுகளுக்கும் முற்பட்டது எனப்படும் அந்த ஆலயத்தை நிறுவியவர் 1850 ஆம் ஆண்டு மறைந்துவிட்ட கோபால்நாத் ஸ்வாமிகள் என்பவரே. அவர் மிமிம்சா மற்றும் வேதாந்தங்களை நன்கு கற்றறிந்தவர். பலரது வாழ்விலும் ஏற்படும் இன்னல்களைக் களைய அவர் ஆன்மீக பாடங்களைப் போதித்தவர். கொடிய மிருகங்களான புலி, சிங்கம், பாம்பு போன்றவற்றை அவர் தன்னுடைய செய்கையாலேயே அடக்கி விடுவாராம். அத்தனை சக்தி பெற்றவர். அஷ்டாங்க யோகாவில் புலமை வாய்ந்தவர். மக்களால் பெரிதும் போற்றப்பட்டவர். சாமிநாராயணன் சம்பிரதாயத்தின் தலைவரான சாமிநாராயண சுவாமி அவர்கள் தான் மறையும் முன்னால் அங்கு ஆலயத்தை நிறுவுமாறு கோபால்நாத் சுவாமியிடம் கட்டளை இட்டாராம்.

 அனுமாருக்கு  ஆரத்தி எடுக்கப் படும் காட்சி
அதை ஏற்ற கோபால்நாத் சுவாமி ஒரு ஆஞ்சிநேய ஆலயத்தை நிறுவினார் . அவர் வைத்த ஆஞ்சேநேயர் உருவத்தை தன் கையில் இருந்த கைத்தடியினால் தொட்டபோது அந்த உருவம் உயிர் பெற்று அசைந்ததாம். அந்த ஆலயத்தில் ஒரு புனிதமான கிணறு உள்ளது. அந்த கிணற்று நீரை நாம் மீது தெளித்துக் கொண்டாலே நம்மைவிட்டு பயம் விலகும் என்கிறார்கள். அந்த குளத்தில்தான் ஆஞ்சேநேயர் மூழ்கிக் கிடந்தார் என்றும் அதை வெளியே எடுத்தே பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது எனவும் நம்புகிறார்கள். அந்த ஹனுமான் உக்ரஹமான முகத்துடன் ஒரு பெண் அரக்கியின் மீது நின்றபடி காட்சி தருகிறார். அவர் படைத்த ஹனுமார் உக்ரஹமானவர். அதைக் கண்டாலே பேய், பிசாசுகள் ஓடிவிடுமாம். கோபால்நாத் ஸ்வாமிகள் மறைந்தப் பின் அவருடைய சக்தி வாய்ந்த கைத்தடி அங்கு வைக்கப்பட்டு உள்ளது.

அந்த ஆலயத்துக்கு பேய் பிசாசுகள் பிடித்தவர்கள் வந்து அமர அந்த ஆலயத்து பூசாரி சில மந்திரங்களை ஓதுகிறார். அந்தக் கைத்தடியினால் அவர்களைத் தொடுகிறார். அதன் பின் அவர்களை அந்த ஆலயத்தில் பிரதர்ஷணம் செய்யுமாறு கூறுகிறார். சிலரது தலை முடியை பிடித்துக் கொண்டு கர்ஜனை செய்வது போல மந்திரம் ஓதுவார். தலையை உலுக்குகிறார். அதன் பின் அவர்களைப் பிடித்துள்ள பேய் , பிசாசுகள் ஓடி விடுமாம். இந்தியாவின் பல இடங்களிலும் இருந்து பேய், பிசாசுகள் பிடித்தவர்கள் வந்து குணம் அடைந்து செல்கின்றனராம். முக்கியமாக சனிக்கிழமைகளில் அங்கு செல்வது விசேஷமாகக் கருதப்படுகின்றது.

அந்த ஆலயத்தில் தினமும் ஐந்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் வந்து மதிய உணவை இலவசமாக அருந்துகிறார்கள். சனிக்கிழமைகளில் அந்த எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் அதிகமாக இருக்குமாம்.
ஆலய விலாசம் :
Kothari swami
Shree Kashta Bhanjan HAnumanji MAndir
Salangpur
Talkuka : Barvala
District : Ahmedabad
Pin:- 382451
India
Tel No :- (0271) 241250 / 241202
email id :- manishshheth@gmail.com