நீலகண்டேஸ்வரர்-கேது ஆலயம்
சாந்திப்பிரியா


அமிருதம் கடைந்த பின் மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவினால் எற்பட்ட விவகாரத்தினால் பாம்பின் உடலாக மாறிய கேது, வெளியில் காவலுக்கு அமர்ந்து இருந்தார். நந்தி தேவர் உறுஞ்சி வெளியில் விட்ட காற்றின் விஷத்தை கேது அடக்கிக் கொள்ள (பாம்புக்கு வாயில் விஷத்தை வைத்துக் கொள்ளும் சக்தி உண்டு) சிவன் நலமடைந்தார். கண் விழித்த சிவபெருமானை கேது சென்று வணங்க, அன்று முதல் அவர் அந்த இடத்திலேயே தன்னுடன் தனி சன்னதியில் தங்கி இருந்து அங்கு வந்து வழிபடும் மக்களுக்கு அறிவும் ஆற்றலும் ஆன்மீகம் எண்ணமும் தந்து கொண்டு இருக்கட்டும் என ஆசிர்வதிக்க அந்த இடம் கேதுவை வணங்கும் நவக்கிரகத்தின் ஒரு தலமாக சோழ மன்னர்களால் கட்டப்பட்டது.
ஆலயம் இரண்டு அடுக்குகளாக உன்ளன. முதலில் வருவது திருநாகேஸ்வரர் சன்னதி ( படம்-2) . அதில் இடப்புறத்தில் வினாயகர் சன்னதி இருக்க அடுத்து சிவபெருமான்- லிங்க வடிவில் வீற்று உள்ளார். வலப்புற சன்னதியில் தஷிணா மூர்த்தி, பைரவர், மகாவிஷ்ணு மற்றும் துர்கை அமர்ந்து உள்ளனர். சிவபெருமானின் வலதுபக்க சன்னதியில் வாயிலை நோக்கி காமாட்சி அம்மன் அமர்ந்து உள்ளார். சிவபெருமானுக்கு எதிர்புறத்தில் நந்தி சிவபெருமானைப் பார்த்தபடி அமர்ந்து உள்ளார்.
வெளியில் வந்தால் ஆலயத்தின் இடப்புறத்தில் கேதுவிற்கு தனிச் சன்னதி உள்ளது (படம்-1) . ஆலயத்தில் உள்ள சிவபெருமானுக்கு பூஜை செய்த பின் கேதுவுக்கும் அந்த தீபத்தினால் ஆரத்தி எடுத்தப் பின்னரே பக்தர்களுக்கு கல்பூரத் தட்டு காட்டப்படும்.
