-8-

221) சில தெய்வங்கள் பூமியில் தவம் முடித்து தேவலோகத்துக்கு திரும்பிச் செல்லும் வரை தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்துவதில்லை. தவம் முடிந்ததும் தமது மானிட உடலை பூமிக்கு அடியில் புதைத்து விட்டோ அல்லது நதிகளில் மூழ்க வைத்த பின்னரோ சாபம் விலகி மீண்டும் தேவலோகத்திற்கு திரும்பிச் சென்றன.
222) பல ஆண்டுகளாக அப்படியே கிடைக்கும் அந்த உடல்கள் இயற்கையின் செயல்களால் பாறைகள் அல்லது கற்களாக மாறி விடும். அதன் பின்னரே அந்தந்த தெய்வங்கள் தாம் புதைந்து இருந்த இடங்களை ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு வெளிப்படுத்தியபோது அந்த சிலைகள் பக்தர்களால் வெளியில் எடுக்கப்பட்டு ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. இப்படியாக வெளிப்பட்ட பல தெய்வங்கள் மெல்ல மெல்ல குல தெய்வங்கள் ஆயினர்.
223) பூமியில் புதைந்து இருந்த தெய்வச் சிலைகளில் சில மட்டுமே ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. மற்றும் சில தெய்வங்களின் சிலைகள் கிராமப்புறங்களில் இருந்த திறந்தவெளி மற்றும் மரங்களுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்தன. அந்த தெய்வங்கள் பல நூற்றாண்டுகளாக அங்கிருந்த பல குடும்பத்தினரால் வழிபடப்பட்டு வந்துள்ளார்கள்.
224) காலப்போக்கில் அந்த கிராமங்கள் நகரங்களாக மாறியபோது அந்த தெய்வங்களின் தெய்வ சக்திகளைக் கேள்விப்பட்ட மன்னர்கள் சிலர் தமது ஆட்சியின் போது அந்த சிறிய கிராம ஆலயங்கள் சிலவற்றை பெரிய ஆலயங்களாக மாற்றி அமைத்தார்கள். பண்டைய காலங்களில் பூமியில் கிடைத்த தெய்வங்களை பிரதிஷ்டை செய்த சிறிய கிராம ஆலயங்களில் இருந்த தெய்வங்களை சில குடும்பத்தினர் குலதெய்வமாக ஏற்றுக் கொண்டு வழிபாட்டு வந்துள்ளார்கள். இதனால்தான் பெரும்பாலான குடும்பங்கள் குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு வழிபடப்பட்டு வந்திருந்த தெய்வ ஆலயங்கள் இன்றும் தொலை தூர கிராமங்களிலும், வனப்பகுதிகள், மலைகள், வயல்வெளிகள் நிறைந்த இடங்களிலும் எளிதில் செல்ல முடியாத இடங்களிலும் உள்ளன.
225)  கிராம தெய்வங்கள் மற்றும் பூத வழிபாடு தொடர்பாக, நான் ஏற்கனவே இரண்டு கட்டுரைகளை எழுதியுள்ளேன். அவற்றையும் இதோடு சேர்த்து படிக்கலாம் :

a) https://santhipriya.com/2015/08/village-deities-and-bhootha-worship-english.html ஆங்கிலத்தில்
b)https://santhipriya.com/2013/03/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae – தமிழ் மொழியில். அவை இன்னும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படவில்லை.
226)  ஆலயங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் எந்த காலகட்டத்தில், எந்த நாட்டில் எல்லாம் கட்டப்பட்டிருந்தன என்பது உறுதியாக தெரியவில்லை. வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, வேத காலத்தில் ஆலயங்களோ வழிபாட்டு தலங்களோ காணப்படவில்லை; ஆனால் AD 1500 ஆண்டு முதல் AD 1600 வரையிலான காலகட்டத்தில் முதன் முதலில் ஆப்கானிஸ்தானில் சில ஆலயங்கள் இருந்ததை கண்டு பிடித்தார்களாம்.
227) அதை போலவே கம்போடியா, தாய்லாந்து, ஈரான், பாகிஸ்தான், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஆப்பிரிக்கா போன்ற ஆசியாவின் பல பகுதிகளிலும் சில ஆலயங்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டாலும், ஆச்சரியப்படும் விதமாக, அந்தக் கால கட்டத்தில் இந்தியாவில் அவற்றைப் போன்ற ஆலயங்கள் காணப்படவில்லை அல்லது சிலை வழிபாடு இருந்ததாகத் தெரியவில்லை. இருப்பினும், வேதகாலத்தின் பிற்பகுதியில், நகரங்களில் இருந்து மிகத் தொலை தூரத்தில் இருந்த இருந்த கிராம ஆலயங்களில் சமிஸ்கிருத மந்திரங்கள் ஓதப்பட்டு சிலை வழிபாடு நடைபெற்று வந்ததாக கூறுகின்றார்கள். அப்படி வழிபடப்பட்ட தெய்வங்களை கிராம தேவதைகள் அல்லது காவல் தெய்வங்கள் எனக் கூறினார்கள். அத்தகைய வழிபாட்டுத் தலங்களில் வழிபடப்பட்டு வந்திருந்த தெய்வங்கள் பெரும்பாலானவை மேல் கூரையின்றி மூன்று பக்கமும் சேற்றால் கட்டப்பட்ட சுவர்களுடன் காணப்பட்டன அல்லது ஆங்காங்கே இருந்த சிறிய குகை போன்ற இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.
228) குல தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த ஆலயங்களில் மிதந்து கொண்டு இருக்கும் தெய்வங்களின் தெய்வீக சக்திக் கதிர்கள் பக்தர்களின் உடல் மீது ஒரு கவசம் போல சுற்றிக் கொண்டு விடும். அந்த பாதுகாப்பு கவசம் சில காலம் நீடிப்பதினால் (அந்த தற்காலிகப் பாதுகாப்பு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெரியவில்லை) எதிர்மறை ஆற்றல்கள் மற்றும் எதிர்மறை சக்திகள் அவர்களது உடலில் ஊடுருவுவதைத் தடுக்கின்றன. அதனால்தான் அந்த காலத்தில் அப்படி ஒரு பாதுகாப்பு கவசத்தை பெற்றுக் கொள்ள மூதையோர்கள் அவர்களது வீட்டின் அருகில் இருந்திருந்த குல தெய்வ ஆலயத்திற்கு தினமும் சென்றார்கள். வெளியூரில் இருந்தால் வருடத்திற்கு ஒரு முறையாவது அந்த ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்வதை ஒரு நடைமுறை பழக்கமாகவே வைத்து இருந்தார்கள்.
229) ஒரு சிலருக்கு ஒரு ஐயம் உண்டாகலாம், ஒவ்வொரு குல தெய்வத்திற்கும் பல்வேறு இடங்களிலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் உள்ள நிலையில் ஒவ்வொருவரிடமும் நேரடியாக சென்று அவர்களை எப்படி பாதுகாத்து வர முடியும்? ஒவ்வொரு குல தெய்வமும் நேரடியாக எவரிடமும் சென்று அவர்களை வழி நடத்தி பாதுகாக்க முடியாது என்பதினால் அவர்கள் அதை கண்களுக்குத் தெரியாமல் தம்மிடம் உள்ள தமது தெய்வ கணங்களின் மூலம் செய்வார்கள். ஒவ்வொரு குல தெய்வத்திடமும் லட்ஷக் கணக்கான தெய்வ கணங்கள் உள்ளன.
230)  அந்த கணங்கள் என்பவை யார் ? ஒவ்வொரு குடும்பத்திலும் மரணம் அடைந்து விட்டவர்களது ஆத்மாக்கள் பித்ரு லோகத்தில் வசித்து வரும். பித்தரு லோகத்தில் சென்று விட்ட பின்னர் அவை தெய்வ கணங்களாக மாறிவிடும். ஒரு குடும்பத்தினர் குறிப்பிட்ட குல தெய்வத்திடம் சரண் அடைந்து விடும்போது அந்த குடும்பங்களை சேர்ந்த, தேவ கணைகளாகிவிட்ட பித்ருக்கள் அந்த குல தெய்வங்களினால் அழைக்கப்பட்டு, தம்மிடத்தில் இருந்து தெய்வ சக்திகளை தந்து, தமது சார்ப்பில் அவர்களது குடும்பத்தினரை பாதுகாத்து வழி நடத்தி வரும். இப்படியாக குல தெய்வங்கள் மட்டும் அல்ல பிற தெய்வங்களும் ஒவ்வொரு குடும்பங்களின் பித்ரு கணங்கள் மூலமே தமது அருளாசிகளை தம்மை வேண்டித் துதிக்கும் குடும்பங்களுக்கு தருகின்றன. அதன் காரணம் ஒரு குடும்பத்தின் பித்ருக்களால் மட்டுமே அந்தந்த குடும்பத்தினரை அடையாளம் காண முடியும் என்பதாகும்.

231) எனவே, ஒவ்வொரு குடும்பத்தினரின் குல தெய்வமும் அந்தந்த குடும்பங்களின் பித்ருக்கள் மூலமே வழி நடத்துகின்றார்கள் என்பதினால்தான் பித்ருக்களை பித்ரு லோகத்தில் திருப்திப்படுத்த தேவையான சடங்குகள் மூலம் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்று எப்போதும் கூறப்படுகிறது. அதே போலவேதான் ஒவ்வொரு குடும்பத்தின் பிரார்த்தனைகளையும் குலதெய்வங்களின் பிரதிநிதிகளாக, நமது கண்களுக்கு புலப்படாமல் மறைந்து கிடைக்கும் அந்தந்த குடும்பங்களின் பித்ரு கணங்களே குல தெய்வங்களிடம் எடுத்துச் செல்கின்றன.
232) பொதுவான ஒரு தத்துவம் என்ன என்றால் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் அவர்களது குல தெய்வ ஆலயத்திற்கு சென்று வழிபட்டு விட்டு திரும்பினாலும் அவர்கள் உடல் கண்ணுக்குத் புலப்படாத குல தெய்வ பாதுகாப்புக் கவசத்தை அவர்களை அறியாமலேயே உள்வாங்கி கொண்டு வந்து பிற குடும்ப உறுப்பினர்களுக்கும் அவற்றை அறியாமலேயே கொடுப்பார்கள் . அந்த குடும்பத்தை சேர்ந்தவர் எத்தனை தூரத்தில் இருந்தாலும், அங்கெல்லாம் செல்லக் கூடிய சக்தி கொண்டவை அந்த தெய்வங்களின் தெய்வீக அலைகள் . அதனால்தான் அந்த குடும்ப உறுப்பினர் கொண்டு வந்திருந்த பாதுகாப்பு கவச சக்தி அலைகள் அவர்களை சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் எங்கிருந்தாலும் அவர்களை சென்றடையும். இதுதான் குல தெய்வ சக்தி ஆகும்.
233) குல தெய்வ ஆலயங்களுக்கு செல்லும் அந்தந்த குல தேவ பக்தர்களுக்கு மட்டுமே அந்த தெய்வங்களின் அருளாசிகளால் ஆன தெய்வீக அலை கிடைக்கும் என்பது இல்லை. அங்கு செல்லும் பிற பக்தர்களுக்கும் அந்தந்த ஆலய தெய்வங்களின் தெய்வீக ஆசிகள் தெய்வீக கதிரலைகளாக கிடைக்கும், அவர்களுக்கு துணை புரியும். ஆனால் அவை அந்த தெய்வங்களை குல தெய்வமாக ஏற்றுள்ளவர்களுக்கு கிடைக்கும் அளவை விடக் குறைவானதாகவே இருக்கும்.
234) ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை தங்கள் குல தெய்வமாக வைத்திருந்து வழிபட்டு வந்திருந்த குடும்பம் எதோ ஒரு காரணத்திற்காக குல தெய்வ வழிபாட்டைப் உதாசீனப்படுத்தத் துவங்கினால் அந்தச் செயல் தெய்வ குற்றமாக கருதப்படும். அப்படி குல தெய்வ வழிபாட்டை உதாசீனம் செய்த குடும்பத்தின் ஏழு தலைமுறைகளும் தெய்வ சாபத்தை பெறுவார்கள். அந்த சாபத்தை விலக்கிக் கொள்ள அடுத்தடுத்த தலைமுறையை சேர்ந்த அந்த குடும்ப உறுப்பினர்கள் பல சிறப்பு வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகளை செய்து, குல தெய்வத்தின் கோபத்தை அடக்கி அதன் அருளுடன் சாபத்தை விலக்கிக் கொள்ள வேண்டி வரும்.
235) 90% க்கும் அதிகமான குல தெய்வங்கள் கிராமப்புறங்களில் காணப்படுகின்றன என்பதைக் கேட்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. முன்பு கூறியது போல், அந்த தெய்வங்களின் தெய்வ சக்திகள் பிரதான தெய்வங்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை. தம்முடைய பக்தர்களுக்கு நேரடியாக அருள் புரியும் அளவிலான சக்திகளைக் கொண்டவை அந்த தெய்வங்கள். அது மட்டும் அல்ல அதே தெய்வங்கள் எந்த ஒருவருக்கு குல தெய்வம் இல்லையோ, எவர் ஒருவர் அந்த தெய்வத்தை தமது இஷ்ட தேவதையாக கொண்டு வழிபடுவார்களோ அவர்களது பிரார்த்தனைகளுக்கும் பதிலளிக்கும் விதத்திலான அதிகாரமும் பெற்றுள்ளன. ஆனால் அதே சமயத்தில் அப்படிப்பட்ட பக்தர்களுடைய பிரார்த்தனைகளுக்கு அருள் புரியும்போது, அவர்கள் மூலம் தம்மை குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு வழிபடும் குடும்பத்தினருக்கு எந்த வகையிலான பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதும் நியதி ஆகும்.
236) முதல் மூன்று யுகங்களில் வெளிப்பட்ட தெய்வங்களின் எண்ணிக்கை, கலி காலத்தில் தோன்றிய தெய்வ எண்ணிக்கையை விட மிக குறைவாகவே உள்ளது. வேத சாஸ்திரங்கள், ராமாயணம் மற்றும் மகாபாரதம் மற்றும் இந்து மதத்தில் உள்ள பல நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதை விட தற்போதைய கலியுகத்தில் காணப்படும் தெய்வங்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளது.
237)  இந்த உலகை செயல்படுத்த வைக்கும் முன்பாகவே பிரும்மா ஒவ்வொரு நிலத்திற்குமான பல்வேறு தன்மைகளையும், எந்தெந்த நிலப்பரப்பில், எந்தெந்த யுகங்களில், குலதெய்வங்கள் உட்பட எந்தெந்த தெய்வங்களை வெளிப்பட வேண்டும், அவர்கள் எங்கெங்கு தோன்ற வேண்டும் என்பவை அனைத்தையும் மிக நேர்த்தியாக கணக்கிட்டு வைத்திருக்கின்றார் என்றே தெரிகின்றது.
238) ஒவ்வொரு நிலப்பரப்பிலும் எத்தனை குல தெய்வங்கள் மற்றும் கிராம தேவதைகள் வெளிப்பட வேண்டும் என்பதற்கு விதிமுறை உள்ளதா என்பது தெரியவில்லை. ஆனால் பிரும்மா பல்வேறு தெய்வங்களை பூமிக்கு அனுப்பியபோது ஒவ்வொரு குல தெய்வங்களின் கீழ் எத்தனை குடும்பங்கள் இருப்பார்கள், அந்த நிலப்பரப்பிற்கு எத்தனை கிராம தேவதைகள் மற்றும் காவல் தெய்வங்கள் தேவை என்பவை அனைத்தையுமே துல்லியமாக கணக்கிட்டே அதற்கேற்ப அளவிலான ஆத்மாக்களை பூமிக்கு அனுப்பினார். ஆனால் அவற்றைக் குறித்து விரிவான விளக்கத்தை பண்டிதர்களால் தர முடியவில்லை.
239) குலதெய்வ வரலாற்றில், மிக முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால், பிரதான தெய்வங்களான சிவபெருமான், விஷ்ணு மற்றும் பார்வதி தேவி போன்ற தெய்வங்கள் குலதெய்வமாக வழிபடப்படவில்லை. ஆனால் காலப் போக்கில் அவர்களுடைய வெவ்வேறு துணை அவதார வடிவங்கள் வெளிப்பட்டு அந்த வடிவங்களில் தோன்றிய சில தெய்வங்களை குல தெய்வங்களாக வழிபட்டார்கள். அதற்கான காரணங்கள் என்ன என்பதைக் குறித்த தெளிவான செய்திகளும் இல்லை.
240) தெய்வ வழிபாடு தொடங்கிய பண்டைய காலத்தில் வழிபடப்பட்ட தெய்வங்கள் யார்? அந்த கால கட்டத்தில் வணங்கப்பட்டவர்கள் கிராம மக்களின் நல்வாழ்வோடு தொடர்புடைய தெய்வங்களாக இருந்தார்கள். அவர்களில் முக்கியமாக பெண் தெய்வங்கள் இருந்தார்கள். அப்படி வணங்கப்பட்டவர்களில் கொடுமையான தோற்றம் கொண்டவர்களும், கருணை தோன்றம் கொண்டவர்களும் என இருதன்மைக் கொண்ட தெய்வங்களுமே வழிபடப்பட்டனர். அந்த கால கட்டத்தில் பிராமணர்கள் மற்றும் பிராமணரல்லாதவர்கள் போன்ற எந்தப் பிரிவும் இல்லை, கிராமத்தில் இருந்த அனைவரும் ஒரே சன்னதி அல்லது ஒரே வழிபாட்டுத் தலங்களில், ஒரே தெய்வத்தை வழிபட்டனர். அவை கிராம தேவதைகளாகவும், காவல் தெய்வங்களாகவும், கற்கள் அல்லது ஆவிகள் வடிவில் கண்களுக்கு தெரியாத தெய்வமாகவோ இருந்துள்ளார்கள்.
241) குல தெய்வமாக வணங்கப்படும் தெய்வங்களை நாம் கவனமாக ஆராய்ந்தால், சுமார் 85% தெய்வங்கள் பெண் வடிவில் இருப்பதைக் காணலாம். அவற்றில் பெருமளவு பார்வதியின் அவதாரங்களாகவும், 10% ஆண் அவதாரங்களாகவும் அதாவது விஷ்ணு அல்லது சிவனின் அவதாரங்கள் மற்றும் சுமார் 5% அளவிற்கும் குறைவில் அபூர்வமாக மூல தெய்வங்களாகவும் உள்ளன. சிவன், விநாயகர், ஹனுமான், விஷ்ணு, பிரம்மா, சரஸ்வதி, மகாலட்சுமி, சந்திரன், சூரியன், சனீஸ்வரர் மற்றும் கிருஷ்ணர் போன்றவர்கள் எவருமே அவர்களின் உண்மையான தோற்றத்தில் குடும்பங்களின் குல தெய்வமாக வணங்கப்படவில்லை.
242) தற்போதைய பிரபஞ்சத்தில் பல்வேறு கொள்கைகளிலான மதப் பிரிவுகள் உள்ளன; அவை ஒவ்வொன்றிலும் பல பிரிவுகள் உள்ளன. இயற்கையாகவே ஒவ்வொரு மதப் பிரிவினராலும் பல தெய்வ சக்திகள் வழிபடப்பட்டு வந்துள்ளது. ஆகவே பல்வேறு வகையான தெய்வக் கொள்கை மற்றும் தெய்வ நம்பிக்கைகளைப் பார்க்கும்போது நம் முன் எழும் முக்கியமான கேள்வி இதுதான்: பிரபஞ்சத்தில் உண்மையிலேயே எத்தனை தெய்வங்கள் உள்ளன?
243)  யஜுர் வேத கூற்றின்படி பிரபஞ்சத்தில் 33 கோடி தெய்வங்கள் அதாவது 330,000,000 கோடி தெய்வங்கள் உள்ளன (Ref: https://en.wikipedia.org/wiki/Hindu_deities). ஆனால் இன்னொரு கணக்கின்படி பிரபஞ்சத்தில் 33 மில்லியன் தெய்வங்கள், அதாவது 33,000,000 மட்டுமே உள்ளனர்,(Ref: https://www.huffpost.com/entry/the-33-million-demigods-o_b_1737207).
244) எத்தனை தெய்வம் எனும் கணக்கில் ஆண் மற்றும் பெண் தெய்வங்கள், துணை தெய்வங்கள்,தேவ கணங்கள், தேவதைகள், மோகினிகள் மற்றும் யோகினிகள் ஆகியோர் அடக்கம் ஆகி இருக்கலாம். பிற மதத்தினர் வணங்கும் தெய்வங்கள் கணக்கில் எடுக்கப்படாமல் இருந்திருக்கலாம்.  காரணம்  யஜுர் வேதம் எழுதப்பட்ட காலத்தில் இந்து மதத்தைத் தவிர வேறு எந்த மதமும் இருந்திருக்கவில்லை.
245) இருப்பினும், தெய்வங்களின் எண்ணிக்கையைக் குறித்து கூறப்பட்டு உள்ள இரண்டு புள்ளி விவரங்களும் தவறானவை என சில ஆய்வாளர்களால் எதிர்க்கப்படுகின்றன. அவர்கள் கூற்றின்படி வேதங்களால் குறிப்பிடப்பட்ட 33 கோடி கடவுள்கள் என்ற சொல் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது, 33 கோடி என்பது 33 வகைகளைக் குறிக்கிறது என்பதே அவர்களது வாதம் ஆகும்.
246) ஆய்வாளர்களில் ஒருவர், 33 கோடி தெய்வங்கள் என்பது முற்றிலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட உண்மை, ஏனெனில் சில வெளிநாட்டு அறிஞர்கள் வேத சமஸ்கிருதத்தை தவறாக மொழிபெயர்த்துள்ளனர். அதர்வண வேதம், யஜுர் வேதம் மற்றும் சதபத-பிரம்மாணா எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ‘த்ரயஸ்த்ரீம்சதி கோடி’ என்ற சொல் 33 கோடி அல்ல முப்பத்தி மூன்று (33) தெய்வங்கள் என்று சரியாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில் கோடி என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று ‘வகை’ மற்றொன்று கோடி என்பதாகும். (Ref : http://www.thenewsnow.co.in/newsdet.aspx?q=7208).
247)  இன்னொரு கருத்தின்படி பதிவு செய்யப்பட்ட வரலாற்று செய்திகளின்படி 8,000 முதல் 12,000 தெய்வங்கள் வணங்கப்பட்டு வந்துள்ளதைக் காண முடிகின்றது. அவை அனைத்துமே ஒன்பது பிரிவுகளிலான தெய்வங்கள். அவற்றில் 5 வகைகளிலான தெய்வங்கள் இந்துக்களால் வணங்கப்பட்டவை ஆகும். (Ref: https://lisbdnet.com/how-many-gods-are-there-in-the-world/).
248) மற்றொரு கருத்தின்படி வரலாற்று செய்திகளின்படி பதிவு செய்யப்பட்ட தெய்வங்கள் சுமார் 8,000 முதல் 12,000 உள்ளன. அவற்றையே பலரும் வணங்கி வந்துள்ளார்கள். அவை அனைத்துமே ஒன்பது வகைகளிலான தெய்வப் பிரிவுகளில் அடக்கம் ஆகின்றன. அவற்றிலும் 5 வகைகளிலான தெய்வங்கள் இந்துக்களால் வணங்கப்பட்டவை ஆகும். (Ref: https://lisbdnet.com/how-many-gods-are-there-in-the-world/).
249) தெய்வங்களாக கருதப்படும் கிராம மற்றும் காவல் தேவதைகள் இந்த கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டனவா என்பது தெரியவில்லை. நிச்சயமாக, நாம் வணங்கும் தெய்வங்களின் எண்ணிக்கை 33 கோடியாகவோ அல்லது 33 மில்லியனாகவோ அல்லது வெறும் 33 என்பதாகவோ இருக்க வாய்ப்பில்லை.
250)  இப்படிப்பட்ட பல்வேறு பதிவுகள் மற்றும் கருத்துக்கள் நம்முள் குழப்பத்தை ஏற்படுத்துவதால், அவை அனைத்தையும் புறக்கணித்து விட்டு உண்மை நிலையை வேறொரு கோணத்தில் ஆராய்ச்சி செய்வது நல்லது.
251)  2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் பரந்த நிலப்பரப்பில் மட்டும் 6,40,930 கிராமங்கள் பரவியுள்ளன (Ref: https://testbook.com/question-answer/how-many-villages-are-approximately-there-in-ind–5e1d7f7cf60d5d2d6cf1c8ee).
252) தெய்வ வழிபாடு இல்லாத ஒரு கிராமம் கூட இந்தியாவில் இல்லை. பெரும்பாலான கிராம தேவதைகளும், தெய்வங்களும் அவர்களது தோற்றத்தில் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டு உள்ளன. இவற்றைக் கணக்கில் கொண்டு நியாயமான முறையில் பார்த்தால் இந்தியாவில் மட்டும், 50% கிராமங்களில் உள்ள மக்கள் ஏதோ ஒரு வகையான தெய்வத்தை வணங்கி வருகின்றார்கள் என்பதை பார்க்கும்போது சுமார் மூன்று லட்ச தெய்வங்கள், அதாவது ஒரு கிராமத்திற்கு ஒன்று என்ற கணக்கில் உள்ளூர் மக்களால் வழிபடப்பட்டு வருகின்றன என்பதாக நிச்சயம் நம்பலாம்.
253)  மேலே அனைத்து பதிவுகளிலும் கூறப்பட்டு உள்ள செய்திகளை படிக்கும் போது, இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு லட்சத்துக்கும் குறையாமல் பல தெய்வங்கள் பல வடிவங்களிலும் தோற்றங்களிலும் இருக்கலாம் என்பது தெரிகின்றது. அவை அனைத்துமே வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த வெவ்வேறு மதத்தினர் வணங்கித் துதிக்கும் தெய்வங்களை உள்ளடக்கியவைகளாகவும் இருக்கலாம்.
254) ஆப்பிரிக்காவில் உள்ள பல பழங்குடியினர் பல தெய்வங்களை வழிபடுகிறார்கள். ஆப்பிரிக்க நாட்டு மக்கள் அங்குள்ள யோருபா எனும் மதத்தின் ஏதாவது ஒரு பிரிவை கடைபிடிப்பவர்களாக உள்ளனர். யோருபா மதம் பரவலாக ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா மக்களிடையே பரவி உள்ளது. 1989 ஆம் ஆண்டு கணக்கின்படி சுமார் எழுபது மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஆப்பிரிக்கா நாட்டில், பல்வேறு பிரிவுகளைக் கொண்ட யோருபா பிரிவில் உள்ள மக்கள் எதோ ஒரு வகையிலான மத வழிபாட்டைக் கொண்டு உள்ளதாக தெரிகின்றது.
255) நைஜீரியாவின் மூன்று முக்கிய இனக்குழுக்களில் ஒன்றான யோருபா வெவ்வேறு முன்னேற்றம் அடைந்துள்ள மானிலங்களில் அமைத்திருந்தாலும், ஒரே இன மற்றும் கலாச்சார தோற்றத்தைக் கொண்டுள்ளது. அவற்றில் மிகவும் சிக்கலான பிரிவுகளைக் கொண்டுள்ள மேற்கு ஆப்பிரிக்க மதப் பிரிவுகளும் இருக்கலாம். அனைத்து யோருபா மக்கள் பிரிவுகளும் சுமார் ஆறாயிரம் தெய்வங்களை வணங்கி வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. (குறிப்பு: https://www.encyclopedia.com/history/news-wires-white-papers-and-books/deities-yoruba-and-fon-religions).
56) தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜூலு எனும் பாரம்பரியமிக்க மதத்தினர் பொதுவாக விலங்குகள் அல்லது இயற்கை தோற்றங்களுடன் சம்மந்தப்பட்ட ஏராளமான தெய்வங்களை வணங்குகின்றார்கள். அவர்கள் அன்குலுங்குலு (பெரியவர்களுக்கும் பெரியவர்கள்) எனும் பெயரில் அழைக்கப்படும் அவர்களுடைய இறந்து போன மூதையோர் ஆவி உலகில் வசிப்பதாக நம்புகிறார்கள். மேலும் அவர்களே அனைத்து உயிர்களுக்கும் ஆவி உலகத்திற்கும் இடையில் இடைத் தரகர்களாகக் செயல்படுகிறார்கள் மற்றும் தெய்வங்களுடன் கைகோர்த்துக் கொண்டு வேலை செய்கிறார்கள் என்பதாக நம்புகின்றார்கள். அவர்கள் வணங்கும் தெய்வங்கள் நமது நாட்டில் உள்ள கிராம தேவதைகளை போன்றவை ஆகும். 1709 ஆம் ஆண்டு வடக்கு குவாசுலு நாட்டினரால் ஸ்தாபிக்கப்பட்ட நாட்டில் உள்ள ஜூலு மதப் பிரிவினர் ஒரு முக்கிய குலமாக இருந்தனர்.
257) பண்டை காலத்தை சேர்ந்த கிரேக்கியர்கள் பல கடவுள்களை வழிபட்டனர், ஒவ்வொன்றும் ஒரு தனித் தன்மைகளைக் கொண்ட தெய்வங்கள். கிரேக்க புராணங்களில் அந்த தெய்வங்களின் தோற்றம் மற்றும் அவை எந்த வகையில் மானிடர்களுடன் தொடர்ப்பு கொண்டு இருந்தன என்பதை விளக்கும் வரலாற்று கதைகள் காணப்படுகின்றன.
258) உலக மதங்களின் எண்ணிக்கை மற்றும் அளவைக் கண்காணிக்கும் ஒரு சுயத் தன்மையான, மத சார்பற்ற நிறுவனமான Adherents என்பதின்படி இந்த உலகில் சுமார் 4,300 மதங்கள் உள்ளன என்பதாக தெரிகின்றது (Ref: https://www.theregister.com/2006/10/06/the_odd_body_religion/). ஒரு மதத்திற்கு ஒரு  தெய்வம் எனக் கணக்கிட்டாலும் 4300 மதங்களுக்கு 4300 எண்ணிக்கைக்கு குறைவான அளவில் தெய்வங்கள் இருக்க முடியாது.
259) எனவே எத்தனை தெய்வங்கள் வழிபடப்பட்டன என்பதற்கு யாராலும் தீர்க்கமான பதிலைக் கூற முடியாது.  தெய்வங்களின் எண்ணிக்கையைக் குறித்து  நாம் கேட்கும் மற்றும் படிக்கும் அனைத்தும் வெறும் அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டவை. உலகில் பல வகைகளிலான தெய்வ வழிபாட்டு முறைகள் உள்ளன, அவற்றின் எண்ணிக்கை எத்தனை என்பதை உறுதியாக கூற முடியாது என்பதை நாம் நம்ப வேண்டும்.

  …….அடுத்த பகுதி கட்டுரையின் அடிப்படை ஆதாரங்களுக்கான செய்திகளின் விவரம்