-3-
58) பிரம்ம குமாரி சமாஜ், காயத்ரி பரிவார், தத்தாத்ரேய பரிவார், திகம்பரர் போன்ற சில ஆன்மீக அமைப்புக்களின் போதனைகளும், ரிஷி முனிவர்கள், சாதுக்கள் மற்றும் சன்னியாசிகளின் வாழ்க்கைக் கதைகளும் இந்தக் கருத்துக்களை எடுத்துரைக்கின்றன. “ரஹஸ்ய ஸ்துதி” எனும் நூலில் படைப்பின் நியதி குறித்து பகவான் விஷ்ணு நாரத முனிவருக்கு உபதேசம் செய்துள்ளதாக கூறப்பட்டு உள்ளதாம். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த நூலும் இன்றுவரை கிடைக்காமல் உள்ளதினால் அதில் இருந்ததாக கூறப்படும் செய்திகளும் நாடோடிக் கதைகள் மற்றும் வாய்மொழியாகக் கதையாகவே கூறப்பட்டு வருகிறது.
59) புராண நூல்கள் மற்றும் நம்பிக்கைகளின்படி,அனைத்து இடங்களிலும் நிலையாக பரவியுள்ள ‘மேன்மையான’, கண்களுக்கு புலப்படாத எதோ ஒரு சக்தி, தனது சொந்த உடலிலிருந்து நிலத்தையும் நீரையும் வெளிப்படுத்திய பின்னர் அதில் அவர் சில விதைகளை (படைப்பைக் குறிக்கும் விதை) தூக்கி ஏறிந்தாராம்; அது ஒரு தங்க முட்டையாக மாறியது; ஒரு வருடத்திற்கும் மேலாக** அனைத்து அம்சங்களையும் கவனமாக ஆராய்ந்த பிறகு, அவர் முட்டையை இரண்டு துண்டுகளாக உடைத்து பூமி மற்றும் சொர்க்கம் என மாற்றினார், அவற்றுக்கிடையே காலியான ஆகாயம் எனும் இடத்தை வைத்திருந்தார்(குறிப்பு: மனுஸ்மிருதி வசனங்கள் 1.8 முதல் 1.13 வரை).
60) திரிபுர ரகஸ்யம் எனும் நூலின் 22 வது அத்தியாயம் பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்து சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது. ‘அவள்’ எனும் அனைத்திற்கும் மேலான தெய்வம் முதலில் தன்னுள் இருந்து பிரும்மா, விஷ்ணு மற்றும் ருத்ரன் எனப்படும் மூன்று சக்திகளின் அம்சங்களை வெளியிட்ட பிறகு, பரந்த பிரபஞ்சத்தை வெளிப்படுத்தியதாக தெரிவிக்கின்றது. மேலும் அதில் பிரம்மா எனும் தோற்றத்தில் வெளிவந்தவர் கோடிக்கணக்கான உயிரினங்களை பல்வேறு அம்சங்களுடன் வெளிப்படுத்தினார், அவற்றில் நிலையான மற்றும் நிலையற்ற உயிரினங்கள் மற்றும் மனிதர்கள் – பெண் மற்றும் ஆண் சக்திகள் இருந்தன. பிரம்மா படைத்ததை, விஷ்ணு வடிவில் வந்த தெய்வம் பாதுகாக்கத் தொடங்கியது. பிரம்மாவால் உருவாக்கப்பட்டு, விஷ்ணுவால் பாதுகாக்கப்பட்டவற்றில் இருந்த தீமைகளை ருத்ரன் எனும் வடிவில் வெளி வந்தவர் அழிப்பவராக மாறுகிறார் என்பதாகவும் கூறப்பட்டு உள்ளது.
61) முட்டையை உடைத்து பிரபஞ்சத்தை வெளிப்படுத்திய நிலையையே ஆராய்ச்சியாளர்கள் பெரும் வெடிப்பு (Big Bang Theory) எனும் தத்துவமாக கூறுகின்றார்கள். பெரு வெடிப்பு தத்துவத்தின்படி, பிரபஞ்சம் 13.7 அல்லது 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகவே படைக்கப்பட்டது. ஆனால் ஆன்மீகவாதிகளின் கூற்றின்படி அதற்கும் முற்பட்ட காலத்திலேயே பிரபஞ்சம் படைக்கப்பட்டு உள்ளது. எது எப்படியோ, பிரபஞ்சம் படைக்கப்பட்ட பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகே பூமி என்பது மானிடர்கள் வாழ்வதற்கு தகுதியான இடமாயிற்று என்பதே உண்மை நிலை ஆகும்.
62) பரபிரும்மனின் உடலில் இருந்து வெளியான பூமியின் நிலை எப்படிப்பட்டதாக இருந்தது என்பதற்கு பெரு வெடிப்பு என்பதின் அடிப்படை அறிவியல் கோட்பாடு விளக்கம் அளிக்கின்றது. இன்று நாம் காணும் பிரபஞ்சம் பரபிரும்மனின் உடலில் இருந்து வெளி வந்தபோது முதலில் சிறு புள்ளியாகத் தெரிந்த தீயின் ஜிவாலை, மெல்ல பெரியதாக பெரியதாகிக் கொண்டே செல்ல அது நெருப்புப் பிழம்பாகவே தோற்றம் தந்து விரிவடையத் துவங்கியது .
63) சிறு புள்ளியாக தெரிந்த நெருப்பு பொறி என்பது பரபிரும்மனால் முதலில் வெளிப்படுத்தப்பட்ட, உருவம் வெளித் தெரியாமல் இருந்த சூரியனாக இருக்கலாம்.வாயுவும், உறைந்த நீருமாக இருந்த பூமி, மெல்ல மெல்ல மாறியவண்ணம் நல்ல காற்றோட்டமும் கடலுமாக உயிரினங்கள் வாழத் தேவையான நிலமாக மாறத் துவங்க பல்லாயிரம் கோடி வருடங்கள் ஆயின என்பதே உண்மை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.
64)ஆய்வாளர்களின் கூற்றின்படி பிரபஞ்சம் படைக்கப்பட்ட பிறகு நான்கு அல்லது ஐந்து கட்டங்களில் உயிரினங்கள் வாழத் தகுதியான நிலையை பூமி எட்டி உள்ளது. முதலில் வெளி வந்த நிலம் கண்களால் பார்க்க முடியாத அளவிலான தூசியினால் மூடப்பட்ட புகை மண்டலமாக காட்சி தந்தது. எதோ ஒரு வாயு முற்றிலும் நிறம்பி இருந்த நிலையில் இருந்த நிலமோ, உருகிய பாறைகளைக் கொண்டு வெளிச்சம் அற்ற இருட்டு நிலமாகவே இருந்துள்ளது. மெல்ல மெல்ல சிறிதளவு வெளிச்சத்தை காணும் வகையில், பூமி மீது படர்ந்திருந்த புழுதிப் படலம் கீழ் இறங்கி வர பல்லாயிரம் கோடி வருடங்கள் ஆக, பூமியும் அனைத்து பக்கங்களிலும் விரிவடையத் துவங்கியது. சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் எங்குமே திரவ வடிவிலான தண்ணீர் இருக்கவில்லை என்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். தேவைக்கும் மிக அதிக அளவிலான வெட்ப நிலையில் இருந்த பூமியில் பாறைகள் திரவ நிலையில் உருகிக் கிடந்தன.
65) விஞ்ஞானிகளின் கூற்றின்படி பூமி குளிர்ச்சியடையும் வரை தண்ணீரானது வாயு வடிவில் அதற்குள் மறைந்து கிடந்ததாகவும், அந்த வாயு மெல்ல மெல்ல திரவ நிலையை அடைந்து கீழ் நோக்கி தண்ணீராக விழத் துவங்கின என்றும், கோடானுகோடி ஆண்டுகளாக இப்படியாக பூமியின் உள்ளே இருந்து வெளியேறிய வாயு, திரவ நிலையை அடைந்து பூமியின் மேற்பரப்பில் மழையாக பெய்தவண்ணம் இருந்துள்ளது. மில்லியன் கணக்கான ஆண்டுகளாக பூமியின் மேற்பரப்பில் மழையாகப் பொழிந்து, அது கடலாக மாறும் வரை தண்ணீரானது வாயு வடிவில் இருந்ததாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தனர். ஆன்மீக ரீதியாக கூறுகையில் கண்ணுக்குத் தெரியாத நிலையில் இருந்த சக்தியானது சந்திரன் மற்றும் வாயு எனும் தெய்வங்களை வெளிப்படுத்த, அவர்களே பூமியை குளிர வைத்து நீரை தோன்ற வைத்து இருக்கலாம் இருக்கலாம் என்றும், பூமியின் மேற்பரப்பில் இருந்த பெரிய பள்ளங்களுக்குள் நீர் வடிந்து அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய கடலாக மாறி இருக்கலாம் என்றும் கூறுகின்றார்கள். மேலும் கண்களுக்கு தெரியாத அந்த சக்தியே வெளிச்சம் தருவதற்கு சூரியனையும் படைத்து உள்ளார். இப்படியாக சூரியன், சந்திரன், வருணன் மற்றும் வாயு ஆகியோரைத் தவிர, கண்களுக்கு தெரியாத அந்த சக்தியினால் உருவாக்கப்பட்ட மற்றொருவர் இந்திரனாக இருக்கலாம். அவர் வானம், மின்னல், இடி, புயல்கள், மழை, நதி ஓட்டம் போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்காக படைக்கப்பட்டு இருந்திருக்கலாம் என்றும், ஆனால் அவர்கள் அனைவருமே முதலில் பூமியை வடிவமைக்கும் நோக்கத்திற்காக மட்டுமே கண்களுக்கு தெரியாத சக்தியினால் வெளிப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்றும் ஆன்மிகவாதிகள் கூறுகின்றார்கள்.
66) மனிதர்கள் அல்லது உயிரினங்கள் உயிர் வாழ மிகவும் அத்யாவசமானாவை பூமியும் கடலும் என்பதால், நிலத்தையும் பெரும் கடலை (நீர்) தோற்றுவித்து அதை தயார் நிலையில் வைக்க பல பில்லியன் ஆண்டுகள் ஆகும் என்பதை ‘கண்களுக்கு தெரியாத சக்தி’ நன்கு அறிந்திருந்தது. எனவே அந்த சக்தி தனது உடலில் இருந்து பூமியை வெளியே கொண்டு வந்த பிறகு, இயற்கை சீற்றங்களைக் கட்டுப்படுத்தும் அளவிற்கான சில முக்கியமான தெய்வங்களை உருவாக்க வேண்டும் என்பதை நன்கே அறிந்துள்ளது. எனவேதான், சூரியன், சந்திரன், வருணன் மற்றும் வாயு போன்ற கண்ணுக்குத் தெரியாத தெய்வங்களும் , இந்திரனும் அவரால் வெளிப்படுத்தப்பட்டு இருந்திருக்க வேண்டும். நீரும் நிலமும் தயார் நிலையில் வைக்கப்பட்ட பின்னர் அந்த சக்தியானது அவர்கள் அனைவரையும் மீண்டும் தன்னுள் இழுத்துக் கொண்டு பிற தெய்வங்கள் படைக்கப்பட்டபோது அவர்களை மீண்டும் வெளிப்படுத்தி இருக்க வேண்டும்.
67) ஆராய்ச்சியாளர்களின் கூற்றின்படி பூமி வெளி வந்த பின்னர் அது உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான நிலையில் அமைய சுமார் 13 பில்லியன் வருடங்கள் எடுத்துக் கொண்டன என்பதாக கூறி உள்ளார்கள். அதாவது கண்ணுக்குத் தெரியாத அந்த சக்தியானது வெளிப்படுத்திய பூமியானது உயிரினங்கள் வாழத் தேவையான நிலையில் மாற்றி அமைத்து பிரும்மா மூலம் உயிரினங்களை வெளிப்படுத்த எடுத்துக் கொண்ட காலம் ஆகும். முதலில் பிரும்மா வெளிப்படுத்திய உயிரினங்கள் சுமார் 15 முதல் 20 விலங்குகள் ஆகும். அவற்றில் இருந்தே சுமார் ஆறு அல்லது எட்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மனித இனம் தோன்றியதாம்.

68) நான்கு யுகங்களின் குணாதிசயங்களைக் கொண்ட பரந்த நிலமும் கடலும் வெளிப்படும் முன்னரே அவை இரண்டும் கண்களுக்கு தெரியாத சக்திக் கதிர்களுக்குள் செயலற்று இருந்துள்ளது என்றும் அதைத்தான் அந்த சக்தி பிரும்மா மூலம் வெளிக் கொண்டு வந்து ஆற்றல் கொடுத்தார் என்று ஆன்மீக குருமார்கள் நம்புகிறார்கள். விஞ்ஞானிகள் இந்த நம்பிக்கையை மறைமுகமாக ஆதரிக்கிறார்கள், அவர்கள் கூற்றின்படி ‘ஏதாவது ஒன்று ஏற்பட வேண்டும் எனில், அதை உருவாக்கத் தேவையான மூல பொருட்கள் சில வேண்டும் என்பதினால், பெரு வெடிப்பு (Big Bang’) என்பதை உருவாக்கிய பொருள் எங்கிருந்து வந்தது, மற்றும் அந்த பொருள் எப்படி எங்கிருந்து உருவாயிற்று’ என்கின்ற விஞ்ஞானிகளின் கேள்விக்கு (Ref: https://www.bbc.com/future/article/20220105-what-existed-before-the-big-bang) கண்களுக்கு புலப்படாமல் உள்ள சக்தியே காரணம் என ஆன்மீக ரீதியில் பதில் கூறுகின்றார்கள்.
69) பிரபஞ்சம் நான்கு யுகங்களாகப் பிரிக்கப்பட்டு இருந்திருந்த நிலையில், நான்காவது யுகத்தின் முடிவில் பிரளயத்தை ஏற்படுத்தி கண்களுக்கு தெரியாத அந்த சக்தியானாது, படைக்கப்பட்டு இருந்த அனைத்தையும் அழித்து விட்டு , மீண்டும் அனைத்தையும் உருவாக்குகின்றது. புராணங்களில் அந்த சக்தியை ஆண் சக்தி என்றும் பெண் சக்தி என்றும் கூறப்பட்டு இருந்தாலும், அடிப்படையில் முதலில் வெளிவந்ததாக கூறப்படும் பிரம்மா, விஷ்ணு மற்றும் ருத்ரனின் வெளிப்பாடு சர்ச்சைக்குரியதாக காணப்படவில்லை.
70) குல தெய்வ கருத்தை விவாதிக்கும்போது, பிரபஞ்சத்தின் படைப்பைப் குறித்து நாம் ஏன் விவாதிக்க வேண்டும் என்று ஒருவர் கேட்கலாம். படைப்பின் ஒரு பகுதியைப் படித்துப் புரிந்து கொள்ளாவிட்டால், மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பு தோன்றி இருந்த குல தெய்வம் உட்பட பல தெய்வங்கள் வெளிப்பட தேவையான காரணங்கள் விளங்காமல் போய்விடும் .
71) இவை அனைத்தும் எடுத்துக் காட்டுவது என்ன எனில் கண்களுக்கு தெரியாத அந்த சக்தியானாது வெளிப்படுத்திய பூமியில் இருந்து கடல் தோன்றி, பிரும்மா படைத்த அசையும், அசையா மற்றும் பிற விலங்கினங்கள் முதல் ஆண் மற்றும் பெண் இனங்கள் என அனைவரும் வாழத் தேவையான நிலமாக மாறவும், மேலும் நிலம் விரிவடையவும் எடுத்துக் கொண்ட காலம் 13.699 பில்லியன் வருடங்கள் ஆகும்.
72) அதனால்தான் அந்த 13.699 பில்லியன் வருட காலத்தை பல்வேறு தெய்வங்களை தன்னுள் சிருஷ்டி செய்து அவர்களை தெய்வ சில்பியான விஸ்வகர்மா மூலம் வடிவமைக்க பரபிரும்மன் பயன்படுத்திக் கொண்டார் என்பதாக பண்டிதர்கள் கூறுகின்றார்கள். தெய்வ சில்பியான விஸ்வகர்மா வடிவமைத்த செய்தியை பின்னர் கூறுகின்றேன்.
73) நிலமும், கடலும் வெளிப்படுத்தப்பட்ட பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகே அதில் மனிதர்களால் வாழ இயலும் என்பதை உணர்ந்து இருந்த கண்களுக்கு தெரியாத சக்தி, அவற்றை அதற்கேற்றவாறு வடிவமைத்தார். இதனால்தான் அகண்டம் வெளிப்படுத்தப்பட்ட பின்னர் உடனேயே குல தெய்வம் உட்பட எந்த தெய்வங்களும் வெளிப்படவில்லை, மனிதர்களே இல்லாத பூமியில் அவர்கள் எதற்காக முதலிலேயே சென்று இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கண்களுக்கு தெரியாத சக்தி தெய்வங்களை படைக்கவில்லை. ஆகவே பூமி தோன்றி வளர்ச்சி அடைந்த மில்லியன் கணக்கான ஆண்டுகள் பிறகே தெய்வங்கள் வெளியாயின.
74) நிலமும் கடலும் தோன்றிய உடனேயே தெய்வங்கள் வெளிப்படுத்தப்படாமல் இருந்ததிற்கு இன்னொரு காரணமும் இருந்தது. தோன்ற உள்ள தெய்வங்களின் உருவங்களை வடிவமைக்க கண்களுக்கு தெரியாத சக்திக்கு பெருமளவிலான காலம் தேவையாக இருந்தது. மேலும் முதல் மூன்று பிரதான தெய்வங்கள் மூலம் மட்டுமே பிற தெய்வங்கள் அனைத்தையும் வெளிப்படுத்த கண்களுக்கு தெரியாத சக்தி திட்டமிட்டு இருந்தார்.
75) முதலில் வெளி வந்த மூன்று ஆண் சக்திகள் பிரம்மா, விஷ்ணு மற்றும் ருத்ரரின் வடிவங்களை எடுத்தவுடன், அவர்களை தொடர்ந்து வெளிவந்த மூன்று பெண் சக்திகளும் பார்வதி, சரஸ்வதி மற்றும் மகாலட்சுமி என்ற பெயரில் உருவம் கொண்டன. பின்னர் முதலில் வெளி வந்த மூன்று ஆண் சக்திகளும், மூன்று பெண் சக்திகளும் சிவன் – பார்வதி, பிரம்மா-சரஸ்வதி மற்றும் விஷ்ணு-மகாலட்சுமி என ஒன்றிணைந்தன. பிரபஞ்சத்தைப் பாதுகாப்பதற்காக, கண்களுக்கு தெரியாத சக்தியானது பல்வேறு காலங்களில் அந்த மூன்று ஜோடி தெய்வங்கள் மூலம் பல சக்திகளை வெளிப்படுத்தினார்; அவை பல வடிவங்களை எடுத்து பரந்த பூமியில் சென்று தோற்றங்களை தராத துவங்கியதும் அவை தெய்வங்கள் என்று அழைக்கப்படலாயின.
76) இப்படியாக முதலில் தோன்றிய மூன்று தெய்வீக ஜோடிகளும் தங்கள் சக்திகளிலிருந்து பல தெய்வங்களை வெளிப்படுத்தினார்கள். அப்படி தோன்றிய தெய்வங்கள் அவரவர் சக்திகளில் இருந்து பல்வேறு தெய்வீக சக்திகளை வெளியிடத் தொடங்கினார்கள். அப்படி வெளி வந்த தெய்வங்கள் துணை தெய்வங்கள், ஊர் காவல் தெய்வங்கள், கிராம தெய்வங்கள் என்ற பல பெயர்களில் அழைக்கப்பட்டன. பிரபஞ்சம் வெளிப்படுத்தப்பட்ட எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, அவை அனைத்தும் நடந்தன என்பதே கேள்வியாகும்.
77) முதலில் தோன்றிய தெய்வங்கள் எவை, அவர்கள் வெளிப்படுத்திய தெய்வங்கள் எவை என்பதைக் குறித்த மூன்று விதமான கருத்துக்கள் உள்ளன. அவை பின்வருமாறு.
(a) சைவ மதத்தினரின் கூற்றுப்படி முதலில் சிவபெருமான் வெளிப்பட அவரிடம் இருந்தே பிற தெய்வங்கள் வெளியாயினர்
(b) வைஷ்ணவ மதத்தினரின் கூற்றுப்படி முதலில் விஷ்ணு பகவான் வெளிப்பட அவரிடம் இருந்தே பிற தெய்வங்கள் வெளியாயினர் (Ref: யதுர் வேத நாராயண சூக்தம் மற்றும் நாராயண உபநிஷத்)
(c) மூன்றாவது கூற்றின்படி பரபிரும்மன் வெளிப்படுத்திய முட்டையில் இருந்து பிரும்மா வெளிப்பட அவரிடம் இருந்துதான் பிற தெய்வங்கள் தோன்றினார்கள்.
(d) நான்காம் கருத்து அதாவது சக்தியே பிரதானம் எனும் கூற்றை ஏற்றுக் கொண்டுள்ளவர்கள், முதலில் வெளி வந்தது சக்தி எனும் பெண் தெய்வமே என்றும் அவளுடைய மனதில் இருந்து பிரும்மா, விஷ்ணு மற்றும் சிவபெருமான் எனும் பெரும் துறவி வெளியானார்கள் என்கின்றார்கள் (Ref: ஸ்ரீமத் பாகவத புராணம் மற்றும் தந்திர சாஸ்திர புத்தகங்கள் ).
78) எது எப்படியோ பரபிரும்மனின் ஒரு பக்கத்தில் இருந்து சிவன், விஷ்ணு மற்றும் பிரும்மா எனும் மூன்று ஆண் தெய்வங்களும் மறுபக்கத்தில் இருந்து பார்வதி, லஷ்மி மற்றும் சரஸ்வதி எனும் மூன்று பெண் தெய்வங்களும் வெளியானார்கள் என்ற உண்மையை யாரும் மறுக்கவில்லை.
79) தான் படைத்த ஆன்மாக்களை பூமிக்கு அனுப்புவதற்கு முன் கண்களுக்கு தெரியாத சக்தியானது பின்வரும் வகையிலான தெய்வங்களை உருவாக்கினார்.
(a) முதலில் நேரடியாகத் தோன்றிய பிரும்மா, விஷ்ணு மற்றும் ருத்திரன் எனும் பிரதான மூன்று ஆண் தெய்வங்கள். அவர்களை தொடந்து வெளியான பார்வதி, லட்சுமி மட்டும் சரஸ்வதி எனும் மூன்று பெண் தெய்வங்கள். இதில் கூறப்படும் இன்னொரு கருத்து என்ன என்றால் விஷ்ணுவின் சக்தியில் இருந்தே பிரும்மா வெளி வந்தார் மற்றும் சரஸ்வதியும், லக்ஷ்மியும் பார்வதியின் சக்தியில் இருந்து வெளி வந்தார்கள் என்பதாகும்.
(b) இரண்டாம் நிலை தெய்வங்கள் என்பவர்கள் பிரதான தெய்வங்களான சிவன், விஷ்ணு மற்றும் பார்வதியின் சக்தியில் இருந்து வெளியான தெய்வங்கள். அவர்களில் சிலர் குலதெய்வமாகவும், வேறு சிலர் இஷ்ட தெய்வங்களாகவும் மாறினர். ஆனால் பிரும்மா, சரஸ்வதி மற்றும் மஹாலக்ஷ்மி எந்த தெய்வங்களையும் தமது சக்திகளில் இருந்து வெளியிடவில்லை.
(c) மூன்றாம் நிலை தெய்வங்கள் வெளிப்படுத்திய கிராம தேவதைகள் மற்றும் பல்வேறு தன்மைக் கொண்ட துணை தெய்வங்கள். அவர்கள் யுத்தங்களில் பங்கேற்க வெளிப்படுத்தப் பட்டார்கள்.
(d) நான்காம் நிலை தெய்வங்களான கிராம தேவதை, ஊர் காவல் தெய்வம், நல்ல ஆவிகள், நல்ல பேய் மற்றும் நல்ல பிசாசுகள். அவர்கள் இரண்டாம் நிலை தெய்வங்கள் மூலம் வெளியானார்கள்.
(e) ஐந்தாவது பிரிவில் தந்திர சாஸ்திரங்களில் பயன்படுத்தப்படும் யோகினிகள், மோகினிகள் போன்றவர்கள் ஆவர். இவர்களும் இரண்டாம் நிலை தெய்வங்கள் மூலம் வெளியானார்கள்.
80) குல தெய்வங்கள் உட்பட துணை தெய்வங்களை, கிராம தேவதைகளை முதலில் தோன்றிய நான்கு தெய்வங்களான சிவன், விஷ்ணு மற்றும் பார்வதி தேவி மட்டுமே வெளிப்படுத்தினார்கள்? பிரதான மூன்று தெய்வங்களின் பணி ஒரு தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பிடத்தக்கவை. அதாவது ஒரு தொழிற்சாலையில் செய்யப்படும் பொருட்கள் ஒரு குழுவால் தயாரிக்கப்பட்டு, இன்னொரு குழுவினரால் சோதனை செய்யப்பட்டு, நல்லவை மற்றும் சிறு பிழைகள் உள்ளவற்றை சரி செய்து அனுப்ப வேண்டியவை என பிரித்து மற்றொரு குழுவிற்கு அவற்றை அனுப்பப்படுகின்றன. மூன்றாவது குழுவோ தம்மிடம் வந்தவற்றை மறு உருவாக்கம் செய்ய முயலும் அல்லது சரி செய்ய முடியாது என்பவற்றை அழித்து மீண்டும் மூலப் பொருள் தயாரிக்க அனுப்பி விடும். இப்படியாகவே ஒரு பொருள் உற்பத்தி ஆகும் தொழிற்சாலையின் செயல்பாடு ஒரு வண்டிச் சக்கரம் போல சுழன்று கொண்டே உள்ளது. ஒரு தொழிற்சாலையில் உற்பத்தி ஆகும் பொருளை, நல்லவை, சிறிது சரி செய்யப்பட வேண்டியவை, மேலும் உபயோகத்திற்கு உகந்தது அல்ல என்பதாக பிரித்து எடுத்து உபயோகத்திற்கு உகந்தது அல்ல என்பவற்றை அழித்து விடும் நிலைக்கு ஒப்பானது ஆகும். இப்படியாகவே உற்பத்தி செயல் முறை சுழற்சி தொடர்ந்து நகர்கிறது. அதேபோலவேதான் பிறப்பு, காத்தல் மற்றும் அழித்தல் என்ற பணிகளும் சுழற்சி முறையில் செல்கின்றது.
…….அடுத்த பகுதி 81ஆம் எண்ணில் இருந்து தொடர்கின்றது
…………கட்டுரையின் அடிப்படை ஆதாரங்களுக்கான சில செய்திகளின் விவரம் கடைசி பாகத்தில் தனியே தரப்பட்டு உள்ளது